Sunday, July 09, 2006

முத்தி என்றால் என்ன?

முத்தி என் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக என்றவென் அருட்பெருஞ்ஜோதி

-என்கிறது அருட்பெருஞ்ஜோதி அகவல்

சித்தி என்பதை அடைவதற்க்கு முன் உதவும் சாதனம் முக்தி என்கிறார் வள்ளல் பெருமானார். உலக பற்றை விட்டு சிவமே என்று பற்றிப்பிடித்தொழுகுவோருக்கு வாய்ப்பது முக்தி நிலை. அந்த முக்தி நிலையானது சித்தியடைய செய்வதற்கு முதல் சாதனம்மாம் என்கிறார் வள்ளலார். இன்னொரு பாட்டில் முத்தியைப் பெற்றேன் எனவும், அம்முத்தியினால் ஞானசித்தியை உற்றேன் எனவும், அதனால் ஞானசித்தனும் ஆனேன் என்று அன்ந்தக் கவிமழை பொழிகிறார் நம் திருவருட்பிரகாச வள்ளலார்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



No comments: